காதி ஊழியர்கள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் காதி கிராம ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் காதி கிராம தொழில் வாரிய ஊழியர்கள் 862 பேரை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி டிஸ்மிஸ்செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக 97 பேர் கடந்த 12ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 97 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிரவிராஜ பாண்டியன், இவர்களது டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மறு உத்தரவு வரும் வரை யாரையும்டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை 862 பேரும் பணியில் நீடிக்கலாம் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications