2 மூட்டை கத்திரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்: குப்பைத் தொட்டியில் கிடந்தது
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கத்திரிக்கப்பட்ட நிலையில் மூடைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டரூ. 4 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி என்ற இடத்தில் ஒரு குப்பைத் தொட்டியில் இரு பெரிய மூட்டைகள் கிடந்தன.அதை சில சிறுவர்கள் பிரித்துப் பார்த்தபோது மூட்டை நிறைய கத்திரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
இதையடுத்து பதற்றமடைந்த சிறுவர்கள், ஊர் பெரியவர்களிடம் தகவல் தர, அவர்கள் உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து ரூபாய் நோட்டுக்கள் இருந்த மூட்டைகளைக் கைப்பற்றினர். அதில் 50 மற்றும் 100ரூபாய் நோட்டுக்கள் கத்திரிக்கப்பட்டு நிறைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் வரை இருக்கும் எனபோலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
இவை கள்ள நோட்டுக்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications