பு.தா.இளங்கோவனுக்கு வன்னியர் சங்கம் ஆதரவு
சென்னை:
தர்மபுரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பு.தா.இளங்கோவன், வன்னியர் சங்கத் தலைவரும் ராமதாசின்தீவிர எதிரியுமான ஏ.கே.நடராஜனை சந்தித்து ஆதரவு கோனார்.
பாமகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த பு.தா. இளங்கோவனை, தர்மபுரியில் போட்டியிட ஆள் கிடைக்காமல்பரிதவித்து வந்த பா.ஜ.க. வளைத்துப் போட்டு வேட்பாளராக்கி உள்ளது.
வன்னியரான பு.தா. இளங்கோவனுக்கு தர்மபுரி தொகுதியில் சொந்த செல்வாக்கு உள்ளது. மேலும், வன்னியர் சங்கத்தை டாக்டர்ராமதாஸ் தொடங்கிதில் இருந்தே அவருடன் கூட இருந்து செயல்பட்டவர், கட்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பதால்வன்னியர்கள் மத்தியில் மரியாதையையும் பெற்றுள்ளார்.
இந் நிலையில், ராமதாசுக்கு போட்டியாக வன்னியர் சங்கம் நடத்தி வரும் ஏ.கே.நடராஜனை சென்னையில் உள்ள அவரது வீட்டில்பு.தா.இளங்கோவன் சந்தித்துப் பேசினார். அப்போது, தர்மபுரியில் தனது வெற்றிக்காக வன்னியர் சங்கம் ஆதரவு தர வேண்டும்என்று நடராஜனிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணிக்கு வன்னியர் சங்கம் ஆதரவு தெவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால்இளங்கோவனுக்காக ஏ.கே. நடராஜன் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது.
மேலும் புதுவை தொகுதியில் லலிதா குமாரமங்கலத்திற்குப் பதிலாக வன்னியரான பேராசிரியர் தீரனை நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் பா.ஜ.கவுக்கு ஏ.கே. நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications