பழனி கோவில் பஞ்சலோக சிலையை அகற்றக் கோரி வழக்கு
சென்னை:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளபஞ்சலோக சிலையை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் சித்தர்கள் ஏற்படுத்திய நவ பாஷான முருகன் சிலை உள்ளது. ஆனால் இந்த சிலைபாழடைந்து வருவதாகக் கூறி காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில், புதிய பஞ்சலோக சிலையைதமிழக அரசின் இந்து அறநிலையத்துறை நிறுவியுள்ளது.
இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்தர்களின் உணர்வை மதிக்காமல் ஆகவ விதிகளைமீறி, காஞ்சி மடத்தின் உத்தரவால் இந்து அறநிலையத்துறை இந்த பஞ்சலோக சிலையை வைத்துள்ளதாகக் கூறிபல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த வடபழனி சித்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், பக்தர்களின் ஆன்மீக உணர்வை அவமதிக்கும் வகையில் இந்தபஞ்சலோக சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை தமிழக அரசு புண்படுத்தி விட்டது.
எனவே புதிய பஞ்சலோக சிலையை உடனடியாக அகற்ற உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது, 3மாதங்களுக்குள் இது தொடர்பாக பரிசீலித்து உரிய முடிவை எடுக்குமாறு இந்து அறநிலையத்துறைக்குஉத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications