For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை காவல் நிலையத்தில் வைத்து ரெளடி வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேயில் காவல் நிலையத்திற்குள் வைத்தே ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார். ரெளடியை வெட்டிய கும்பல்,போலீஸாரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றது.

முதலியார்பேட்டை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். பெரிய ரெளடியான இவர் மீது 3 கொலை வழக்குகள்உள்பட மொத்தம் 8 வழக்குகள் உள்ளன. இவருக்கும் வெங்கடேஷ் (ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் இவர் மீதுஉள்ளன) என்ற மற்றொரு ரெளடிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் நவக்குளம் என்ற இடத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக இந்த முன் விரோதம் அதிகரித்தது. இந்நிலையில், வெங்கடேஷ் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேர் நேற்று ஜெயக்குமாரை கொலை செய்யும் திட்டத்துடன் அவரதுஇருப்பிடத்திற்கு வந்தனர்.

கொலைக் கும்பலைப் பார்த்ததும் ஜெயக்குமார் ஓட்டம் எடுத்தார். ஆனால் விடாமல் துரத்தியது கொலைக் கும்பல். பயந்து போனஜெயக்குமார் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்தார்.

காவல் நிலையத்திற்குள் ஜெயக்குமார் நுழைந்தாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாத கொலைக் கும்பலும் உள்ளேதபதபவென நுழைந்தது.

இரு ரெளடிக் கும்பல்கள் உள்ளே வருவதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்வெங்கடேஷ் கோஷ்டியினர், ஜெயக்குமாரை காவல் நிலையத்தில், காவலர்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டித்தள்ளினர். பின்னர் அவர் மீது நாட்டு வெடிகுண்டையும் வீசினர். இதில் ஜெயக்குமார் அங்கேயே இறந்தார்.

வெங்கடேஷ் கும்பலைத் தடுக்க முயன்ற ராஜாராம், முருகேசன் ஆகிய காவலர்களுக்கு காலில் வெட்டு விழுந்தது. இதையடுத்துகொலைக் கும்பல் தப்பிச்சென்று விட்டது.

காவல் நிலையத்தில் வைத்தே இந்த பயங்கர படுகொலை நடந்தது முதலியார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு முன் திரண்டு வந்து போலீஸ் ஸ்டேசனிலேயே கொலை நடக்கும் அளவுக்கு சட்டம்ஒழுங்கு சீர் கெட்டு நாறிக் கிடப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர்.

புதுவை தெற்கு மாவட்ட பகுதியில் உள்ள 10 பெரிய ரெளடிகள் பட்டியலில் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரதுபெயர்கள் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ரெளடிகளிடம் காசு வாங்கி, பிழைப்பு நடத்தும் போலீசார் காரணமாக ரெளடிகளுக்கு போலீஸ் பயம் என்பதே இல்லாமல்போய்விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X