ஏப்.4ம் தேதி பிரசாரத்தில் குதிக்கிறார் ராதிகா செல்வி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகா செல்வி ஏப்ரல் 4ம் தேதி முதல்பிரசாரத்தில் குதிக்கவுள்ளார்.
சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி. இவர் திமுகவேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்குள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் சென்னையில் உள்ளஉறவினர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். வருகிற ஏப்ரல் 4ம் தேதி முதல் அவர் திருச்செந்தூர் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில்ஈடுபடவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளில் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தீவிரமாக உள்ளார்.திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட சேரன்மாதேவி பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்யும்போது அவருடன் ராதிகா செல்வியும்கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.