ஓட்டு கேட்டு வந்த அதிமுக எம்எல்ஏ, மாஜி எம்.பியை விரட்டியடித்த மக்கள்
சேலம்:
ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்ற தலைவாசல் அதிமுகஎம்.எல்.ஏ. அழகம்மாள், ராசிபுரம் முன்னாள் எம்.பி. சரோஜா ஆகியோரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.அழகம்மாளும், முன்னாள் எம்.பி. சரோஜா வாக்குச் சேகரிக்க சேலம் கெங்கவல்லி பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, தொகுதிக்கு எதுவும் செய்யாத அழகம்மாளும், சரோஜாவும் ஊருக்குள்வரக்கூடாது என்று கோஷமிட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை பார்த்து அழகம்மாளும், சரோஜாவும் எதுவும் பேசமுடியாமல், ஊருக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனர்.
பின்னர் அன்பழகன் மட்டும் தனித்து பிரசாரம் செய்தார். இதேபோன்ற எதிர்ப்பு தலைவாசல் தொகுதியின் பலஇடங்களில் அழகம்மாளுக்கும், சரோஜாவுக்கும் நிலவியதால், அன்பழகன் தனித்துப் பிரசாரம் செய்யும் நிலைஏற்பட்டது.












Click it and Unblock the Notifications