மக்களிடம் இருந்து தப்பிய அமைச்சர் செம்மலை: மாட்டிக் கொண்ட அதிமுக வேட்பாளர்
சேலம்:
வாக்கு சேகரிக்கச் சென்ற சேலம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனை பெண்கள் சுற்றி வளைத்துகடுமையாக வாக்குவாதம் செய்து திருப்பி விரட்டியடித்தனர். இச் சம்பவம் நடக்க இருப்பதைஅறிந்த அமைச்சர் செம்மலை பாதி வழியிலேயே பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓடிவிட்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை அந்தத் தொகுதியின் வேட்பாளர் ராஜசேகருடன்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது சொந்தத் தொகுதியான ஓமலூரில் வாக்கு சேகரிக்க ராஜசேகரனை அழைத்துக் கொண்டுதிறந்த ஜீப்பில் கிளம்பினார் செம்மலை. ஆனால், தொகுதிக்கு செம்மலை ஏதும் செய்யாததால் அவர்மீது கடுப்பில் உள்ள அப் பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிடத் தயாராயினர்.
மேட்டுப் பகுதி என்ற இடத்தில் பெண்களும் ஆண்களுமாக நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
இது குறித்து அமைச்சருக்கு அவரது ஆட்கள் செல்போனில் தகவல் தந்தனர். இதையடுத்துகரும்பாலை பகுதியிலேயே ஜீப்பில் இருந்து இறங்கிவிட்ட செம்மலை, வேட்பாளர் ராஜசேகரனைமட்டும் வாக்கு சேகரிக்க அனுப்பி வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
விவரம் தெரியாமல் மேட்டுப் பகுதிக்குள் நுழைந்த ராஜசேகரனின் ஜீப்பை பெண்கள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். எங்கேயா உங்க அமைச்சர்? என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல்ராஜசேகரன் தவியாய் தவித்தார்.
தொகுதிக்கு எதுவும் செய்யாத செம்மலை கட்சியை சேர்ந்த உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்.எங்கள் பகுதிக்குள் நுழையாமல் திரும்பிப் போய்விடுங்கள் என்றனர்.
உடனே ராஜசேகரனுக்கு ஆதரவாக உடன் வந்த அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதையடுத்துஅங்கு திரண்டிருந்த ஆண்கள் முன்னேறி வந்து அதிமுகவினரின் சட்டைகளைப் பிடிக்க, உடனேஜீப்பைத் திருப்பச் சொல்லி தப்பி ஓடினார் ராஜசேகரன்.
அமைச்சர் செம்மலை அப் பகுதி வந்திருந்தால் பெரும் ரசாபாசம் நடந்திருக்கும் என்பது மட்டும்உறுதி. பாதியிலேயே அவர் திரும்பிவிட்டதால் தப்பிவிட்டார்.