தேர்தல் விதிமீறல்: திமுகவுக்கு தடை விதிக்க அதிமுக கோரிக்கை
சென்னை:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்ட திமுக, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல்ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக தேர்தல் செலவுகளுக்காக ரூ.25 கோடி நிதி திரட்டியதாகவும், வேட்பாளர்களிடம்ரூ.60 லட்சம் டெபாஸிட் கட்ட வற்புறுத்தியதாகவும் திமுக மீது அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ள.
இந் நிலையில் இது தொடர்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேர்தல் ஆணையத்திடம் இரண்டாவதாக ஒருமனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை திமுக மீறியது தொடர்பாக அதிமுக கூறிய புகார்களுக்கு கருணாநிதி அளித்தபதில் நம்பும்படியாக இல்லை.
கருணாநிதி தனது அறிக்கையில், திமுக பொதுக்குழுவில் இந்த மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமில்லாமல் இனிவரும் எல்லா தேர்தலுக்கும் சேர்த்து தான் நிதி திரட்டப்பட்டது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிஇருக்கிறார்.
ஆனால் 2004 மக்களவைத் தேர்தலுக்காகத்தான் குறைந்தது ரூ.25 கோடி நிதி திரட்ட வேண்டும் என்று திமுகதீர்மானம் போட்டதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்புமக்களிடமும் தீவிர நிதி வசூல் செய்துள்ளனர்.
நிதி கொடுக்காதவர்களை மிரட்டியுள்ளனர். கடைகள் சூறையாடியுள்னர். தேர்தல் நிதி வசூல் ரூ.30 கோடியைதாண்டி இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் வேட்பாளர் ரூ. 60 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதுதொடர்பான புகாருக்கும் கருணாநிதி உரிய பதில் அளிக்கவில்லை.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆலடி அருணாவே தலைமை தன்னிடம் டெபாசிட் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறிஇருக்கிறார். ரூ.30 லட்சத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்ததாகவும், மீதி ரூ.30 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட்செய்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.
இதுபற்றியும் தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் விதிகளை மீறிய திமுகதேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications