மதுரை சம்பவம்: 7 பா.ம.க. தொண்டர்கள் கைது
மதுரை:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாமகவினர் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகனைஆதரித்துப் பேச பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தபோது, ரஜினி ரசிகர்கள் சிலர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டமுயன்றனர்.
அப்போது ராமதாஸுடன் வந்த பாமகவினர் ரஜினி ரசிகர்களைத் தாக்கினர். இதில் ரஜினி ரசிகர் மன்றத்தைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் மணவாளன், சிங்கராஜ் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 25 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் பாமகவின் மதுரை நகர் இளைஞரணித் தலைவர் இருளப்பன், மாவட்ட தொண்டரணித் தலைவர்சிவா, தொண்டரணிச் செயலர் சசிகுமார், தொண்டரணி பொருளாளர் முருகன், தொண்டர்கள் பார்த்திபன்,ஆனந்தகுமார், சுகுமாரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications