பிளஸ் டூ தேர்வு தோல்வி பயத்தில் மாணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
பிளஸ் டூ தேர்வை சரியாக எழுதாததால், தோல்வி அடைவோம் என்ற பயத்தில் ரயில் முன் பாய்ந்துமாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (19) இப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில்உடல் துண்டாகி இறந்து கிடந்தார். அவர் ரயிலில் விழுந்து இறந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பிளஸ் டூ தேர்வை சரியாக எழுதவில்லை என்றசோகத்தில் நவநீதகிருஷ்ணன் இருந்ததாகவும், சரியாகத் தேர்வெழுதாததால் அவரது தந்தைதிட்டியதாகவும் இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும்தெரியவந்தது.












Click it and Unblock the Notifications