ஏ.கே.மூர்த்தி இனி மத்திய அமைச்சராகவே முடியாது: இல.கணேசன் சாபம்
காஞ்சிபுரம்:
ஏ.கே.மூர்த்தியால் இனிமேல் மத்திய அமைச்சராகவே முடியாது என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர்இல.கணேசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கணேசன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,பா.ம.கவில் சாதாரண கட்சித் தொண்டராக இருந்த ஏ.கே.மூர்த்திக்கு வாஜ்பாய் மத்திய அமைச்சர் பதவியைக்கொடுத்தார். அதிலும், ரயில்வே துறையையும் கொடுத்து கெளரவப்படுத்தினார்.
அப்படிப்பட்ட வாஜ்பாய்க்கு துரோகம் இழைக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை உதறி விட்டுப் போனார்மூர்த்தி. இனிமேல் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவே கிடைக்காது, எம்.பியாக கூட தேர்வு பெறமாட்டார்.
அவர் இனிமேல் ரயில் நிலையங்களுக்குப் போனால் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கியாக வேண்டும் என்றார்கணேசன்.
காஞ்சி மடாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் ஏ.கே.மூர்த்தி. அப்படி இருக்கையில், ஏ.கே.மூர்த்தியை கடுமையாகசாடி இல.கணேசன் பேசியது அப்பகுதி பாமகவினரோடு பாஜகவினருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரானவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயரைப் பெற்றவர்மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு ஏகப்பட்ட புதியரயில்களையும், ரயில்வே திட்டங்களையும் கொண்டு வந்தார்.












Click it and Unblock the Notifications