4 வயது சிறுமியிடம் பலாத்காரம்: 13 வயது சிறுவன் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 13 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. கடந்த மாதம் 30ம் தேதி, வளசரவாக்கம்திருமலை நகர் பகுதியில் உள்ள நடராஜன் சாலை பகுதியைச் சேர்ந்த அச் சிறுவன் (8ம் வகுப்பு படிக்கிறான்), அதே பகுதியைச்சேர்ந்த 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. சிறுமியைக் காணாமல் அவளைத் தேடி வந்தபெற்றோர், சிறுவனின் வீட்டில் தங்கள் மகள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

உடனடியாக சிறுவனை அடித்து விட்டு மகளை அழைத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீஸில்புகார் கொடுக்கவில்லை.

இந் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுவனை போலீஸார் கைது செய்து சிறார் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அதன் பின்னர் கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

(சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளது அடையாளத்தையும், சிறுவனின் பெயர், அடையாளங்களைதட்ஸ்தமிழ்.காம் வெளியிடவில்லை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+