For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று பிரசாரம் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை தேர்தல் ஆணையம்தான் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பா.ஜ.கவும் அதிமுகவும் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று பிரசாரம் செய்து வருவதற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி தணிகாசலம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,

இப் பிரச்சினை குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஆணையத்தின் பரிசீலனையில் இப்பிரச்சினை இருப்பதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அது தொடர்பானஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையம் இப் பிரச்சனையை எடுத்துள்ளதால், இந்த மனு உயர் நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்லஎன்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X