எஸ்.எஸ்.எல்.சி தேர்வு: ஆள் மாறாட்டம் செய்த 2 மாணவர்கள் கைது
திருவண்ணாமலை:
பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய 2 பேரை ஆரணி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வின்போது,பெரியபாளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்குப் பதிலாக கனியம்பாடி கிராமத்தைச்சேர்ந்த விமல் (21) என்பவர் தேர்வு எழுதியதை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலீஸார் விமலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனனைத் தேடிவருகிறார்கள்.
இதேபோல் ஆரணியில் உள்ள செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில், கொங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன்என்பவருக்குப் பதிலாக அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (19) என்ற மாணவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்ததை பறக்கும் படையினர் கண்டு பிடித்தனர்.
போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட முருகனைத் தேடி வருகின்றனர்.
மேலாரணி அரசு உயர் நிலைப் பள்ளியில் காப்பி அடித்த மாணவர் ஒருவரை பறக்கும் படை கண்டுபிடித்து தேர்வுமையத்திலிருந்து வெளியேற்றியது












Click it and Unblock the Notifications