கிரிக்கெட் மேட்ச்: நரேந்திர மோடி Vs
சென்னை:
தன்னை சிறந்த "பெளலராக" கூறிக் கொள்ளும் நரேந்திர மோடி பந்தை வீசுவதற்கு மாறாக எறிகிறார். அவரைஅணியில் வைத்துக் கொள்வது குறித்து "கேப்டன்" வாஜ்பாயும், "துணை கேப்டன்" அத்வானியும் மறு பரிசீலனைசெய்வது நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுத்தார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நோ பால் போன்றவர்கள் என்று மதக் கலவர ஸ்பெஷலிஸ்டான குஜராத்முதல்வர் நரேந்திர மோடி கிரிக்கெட் பாணியில் விமர்சித்திருந்தார். இதற்கு வாசன் பதிலடி தந்து கிரிக்கெட்விளையாடினார்.
மோடியின் பாணியிலேயே பதில் தந்த வாசன், மோடி பந்தை எறிவதை எந்த "அம்பயரும்" மறுக்க மாட்டார்.எனவே அவரை அணியில் வைத்திருப்பது குறித்து "கேப்டன்" வாஜ்பாயும், "துணை கேப்டன்" அத்வானியும்சிந்திக்க வேண்டும்.
மோடியை தங்களது அணியில் தொடர்ந்து வைத்துக் கொண்டால், அந்த அணி தோல்வியைத் தழுவுவதை தடுக்கமுடியாது என்றார் வாசன்.