வட-கிழக்கில் சுயாட்சி நிர்வாகம்: புலிகள் திட்டவட்டம்
கொழும்பு:
வட-கிழக்கு இலங்கையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட இடைக்கால நிர்வாகத்தை அமைக்கும்எங்களது திட்டத்தை ஏற்றுக் கொண்டு பேச்சு நடத்த புதிய அரசு முன் வர வேண்டும் என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஏற்கனவே நிராகரித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது அவரது கட்சியே பிரதமர் பதவியைப் பிடித்துள்ள நிலையில்,புலிகளின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தங்கள் ஆதரவுடன் தேர்தலில் வென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் 22 எம்.பிக்கள் மூலமாக புலிகள்இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இந்த எம்.பிக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட-கிழக்கு இலங்கையில் புலிகளின் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கும் திட்டத்துடன்மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை புதிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
1.9 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 12.5 சதவீதம் வசிக்கும் தமிழ் மக்களின்ஏகோபித்த பிரதிநிதிகளாக புலிகளை இந்த அரசு அங்கீகரிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சந்தித்து வரும் துன்பங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்மேலும் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தையை அரசு தொடங்க வேண்டும் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய சந்திரிகா, விடுதலைப் புலிகளுடன் மீண்டும்பேச்சுவார்த்தை நடத்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார்.
ஆனால், புலிகளின் அடிப்படைக் கோரிக்கையான சுயாட்சி அதிகாரம் கொண்ட இடைக்காலநிர்வாகத் திட்டத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதை சந்திரிகா விளக்கவில்லை.












Click it and Unblock the Notifications