விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி, ப.சி.

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

பொடா வழக்கிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:

முன்பு இதே வேலூர் சிறையில் இருந்த எனது தம்பி வைகோவை காண வந்தேன். வைகோவையும் மற்றவர்களையும் சிறையில்அடைத்தது சரியா என்று எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து குரல் கொடுத்ததால் பொடா மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அவர்களைக் கைது செய்தது தவறு என்று அந்த குழு அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு இந்தக் கூட்டத்தில் பேசவந்துள்ளேன்.

இந்த கூட்டம் தானாக விரும்பி வந்துள்ள கூட்டமாகும். இப்போதுள்ள நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து திமுகவுக்குவாக்களிக்க வந்துள்ள கூட்டம் என்றார் கருணாநிதி.

ப.சிதம்பரம் கேள்வி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்துள்ளது பாராட்டுக்குரியது என்று காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைகோ மீதான பொடா வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று பொடா மறு ஆய்வுக் குழுகூறியுள்ளது. இதுபாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.

இந்த தீர்ப்பையடுத்து, பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுமாற அதிமுகவிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்குமா? அந்த வேண்டுகோளைஅதிமுகஏற்குமா? அப்படி ஏற்காவிட்டால் அதிமுகவின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பாஜக விளக்க வேண்டும் என்றுகேட்டுள்ளார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+