அரசியல்வாதிகளின் "மூளைச் சலவை" குறித்து சேஷன்
மதுரை:
கிராமப் பகுதிகளுக்கு பிரசாரம் செய்யச் செல்லும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில்ஓட்டுபோடும்போது தங்கள் சின்னம் உள்ள பொத்தானை மட்டும் அழுத்துமாறும், வேறு பொத்தானைஅழுத்தினால் மின்சாரம் பாய்ந்து விடும் என்றும் வாக்காளர்களை எச்சரிப்பதாக முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன் கூறியுள்ளார்.
மதுரை வந்த டி.என்.சேஷன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குவிளக்கமளித்தார். அவர் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது. 100சதவீதம் பாதுகாப்பானவை அவை.
ஆனால் கிராமப் புறங்களில் பிரசாரத்திற்குச் செல்வோர், தங்களது சின்னம் உள்ள பொத்தானை மட்டுமே அழுத்தவேண்டும். வேறு பொத்தானை அழுத்தினால், கரண்ட் அடித்து விடும் என்று என்று கிராம மக்களை மூளைச்சலவைசெய்கிறார்கள் என்றார் சேஷன்.
அடப் பாவிகளா!