For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாபஸ் வாங்க தமிழக அரசு மறுப்பு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வைகோ மீதான பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் வாங்காது என்று தெரிகிறது.

பொடாவில் வைகோவும் பிற மதிமுகவினரும் கைது செய்யப்பட்டது செல்லாது என்று கூறியுள்ள பொடா மறுஆய்வுக் குழு, இந்த வழக்கை வாபஸ் பெற அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்என்று பரிந்துரைத்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தக் குழுவின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி வந்த தமிழக அரசு, இப்போதுவழக்கை வாபஸ் பெறுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் தமிழக அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த விவகாரம்தொடர்பாக அவரச ஆலோசனை நடத்தினர்.

இதில் வழக்கை வாபஸ் வாங்கலாமா இல்லையா என்று விரிவாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலும் வழக்குவாபஸ் இருக்காது என்றே கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X