ஓட்டுப் போடுவதை தவிர்க்காதீர்: வாசன் கோரிக்கை
சென்னை:
இந்தியாலேயே அதிக கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் உள்ள தமிழகத்தில் வாக்குரிமை பெற்ற அனைவரும்தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டிலேயே கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் அதிகம்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைந்தஅளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 58 சதவீத வாக்குகளே பதிவாகின. கிராமப்புறங்களைக் காட்டிலும்நகர்ப்புறங்களிலேயே குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின்றன. இது வருத்தம் தருகிறது.
வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றிட முன்வர வேண்டும்.ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குகளை செலுத்த முன்வர வேண்டும் என்றுகூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications