சென்னை ஆசிரமத்தில் ரூ. 4.5 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை புற நகரான போரூர், சமயபுரம் பகுதியில் ஆசிரமத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள தங்கக் காசுகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
சமயபுரத்தில் தர்மலிங்கம் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி ஆசிரமத்தைப் பூட்டி விட்டு வெளியூர்போயிருந்தார். இன்று காலை ஊர் திரும்பினார்.
ஆசிரமத்தைத் திறந்து உள்ளே சென்றபோது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதும், பீரோ உடைக்கப்பட்டதையும்கண்டார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கக் காசுகள், ரூ. 1 லட்சம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம்திருடு போயுள்ளதாக தர்மலிங்கம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications