நீலகிரி கலக்கல்: மாஸ்டரை பாராட்டியே கவிழ்க்கும் பிரபு
உதகமண்டலம்:
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மாஸ்டர் மாதனை திட்டாமல், விமர்சிக்காமல், வாழைப்பழத்தில்ஊசி ஏற்றுவது மாதிரி பாராட்டியே கவிழ்த்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர். பிரபு
பிரபுவின் பிரசார உத்தி வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சி வேட்பாளரையும், பிற தலைவர்களையும் கடுமையானவார்த்தைகளால் சாடாமல் மிகவும் மென்மையாக அவர்களது பலவீனத்தைக் கூறி வாக்கு சேகக்கிறார் பிரபு.
ஒரு பிரசாரக் கூட்டத்தில் பிரபு பேசுகையில், இந்தத் தொகுதியின் எம்.பியாக மாஸ்டர் மாதன் இருந்துள்ளார். ஆனால் அவரால்தொகுதிக்கு ஒரு நல்லதையும் செய்ய முடியவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்லக் கூடாது.
முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. எனவேஅவரால் நாடாளுமன்றத்தில் பேசவே முடியாமல் போய்விட்டது. தமிழிலாவது பேசியிருக்கலாம், அதையும் அவர்செய்யவில்லை.
தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக அவரை யாரும் குறை சொல்ல வேண்டாம். அவரது நிலைமை அப்படி.உலக விவரமே தெரியாத ஆசாமி அவர். எனவே நானும் அவரை விமர்சிக்க மாட்டேன். அவர் எனது நல்ல நண்பர்.
இந்தத் தொகுதியின் எம்.பியாக நான் பலமுறை இருந்தபோது செய்த திட்டங்களை, நலப் பணிகளை மக்கள் அறிவார்கள். எனவேஇந்த முறையாவது மாஸ்டர் மாதனுக்குப் பதில் என்னைத் தேர்ந்தெடுத்தால் தொகுதிக்கு பலன் கிடைக்கும் என்று கூறிக் கொள்ளவிரும்புகிறேன்.
இவ்வாறு மாஸ்டரை பாராட்டியே கவிழ்த்து வருகிறார் பிரபு.












Click it and Unblock the Notifications