அவசியம் ஏற்பட்டால் மீண்டும் பிரஸ்மீட்: ரஜினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அவசியம் ஏற்பட்டால் நிருபர்களை மீண்டும் சந்திப்பேன் என்று ரஜினி இன்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைக்காட்சி நண்பர்களுக்கும், புகைப்பட நண்பர்களுக்கும் எனது வணக்கம். எனது பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.
சந்திப்பின்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் போனதன் காரணத்தை நீங்களே அறிவீர்கள். அந்த இடத்தில் ஒரே கூச்சல்,குழப்பம் நிலவியதால் நான் பேச முடியவில்லை. மீண்டும் ஒரு பிரஸ் மீட் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தேவைப்பட்டால் இடையூறுகளை தவிர்த்து விட்டு மீண்டும் உங்களைச் சந்திப்பேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications