தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இதையடுத்துபுதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் 5 கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட102 மக்களவைத் தொகுதிகளில் கடைசி கட்டமாக வரும் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இன்று காலை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றாலும் இப்போது தேய்பிறை காலம்என்பதால், 19ம் தேதிக்கு (திங்கள்கிழமை) மேல் வளர்பிறை ஆரம்பித்த பின்னரே அதிமுக, பா.ஜ.க.,காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
ஆனால், திமுக வேட்பாளர்கள் நாளை முதலே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறனும், வட சென்னையில்போட்டியிடும் செ.குப்புசாமியும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள் அமாவாசையான 19ம் தேதியும், வளர்பிறை ஆரம்பித்த பின்னர் வரும்பஞ்சாங்கப்படி மிக நல்ல நாளான 22ம் தேதியன்றும் தான் வேட்பு மனு தாக்கல் செய்வர் என்று அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. பா.ஜ.க வேட்பாளர்களும் அதே அமாவாசை லாஜிக்படி 19ம்தேதிக்குப் பின்னரே வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
வேட்பு மனுக்களை வரும் 23ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். 24ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்படும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் மனுக்களை வாபஸ் பெறகடைசி நாள் ஏப்ரல் 26.
இதையடுத்து மே 10ம் தேதி தேர்தல் நடக்கும். 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிவுகளும்தெரிந்துவிடும்.
அதே போல மங்களூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவும் இன்று முதல் வேட்பு மனுதாக்கல்தொடங்குகிறது.