நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ. 40 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை புறநகரில் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ. 40 லட்சம் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரி அருகே உள்ளது பள்ளிக்கரணை. இங்கு கிருஷ்ணா தங்க மாளிகை என்ற நகைக் கடைஉள்ளது. நேற்றிரவு 7.30 மணிக்கு 3 பேர் கடைக்கு வந்துள்ளனர். நகை வாங்க வேண்டும் என்றுகடைக்காரர்களிடம் கூறியுள்ளனர்.
சிறிது நேரம் நகைகளைப் பார்ப்பது போல நடித்த அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துகடை உரிமையாளர் சென்னாராம், அவரது தம்பி சுக்காராம், வாடிக்கையாளர் முருகன் ஆகியோரை மிரட்டினார்.
பின்னர் இன்னொரு நபர் கடையின் லாக்கர் சாவி எங்குள்ளது என்று சென்னாராமிடம் கேட்டார். அவர் கொடுக்கமறுக்கவே அவரை சரமாரியாக அடித்த அந்த நபர் பின்னர் சாவியைப் பிடுங்கினார்.
லாக்கர் அறையைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கம், 9 கிலோ தங்க நகைகள், 35கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் ஒருஆட்டோவில் ஏறித் தப்பினர்.
கொள்ளையர்கள் போன பின்பு சென்னாராம் போலீஸில் புகார் கொடுத்தார். செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் மகேந்திரகுமார் ரத்தோட் கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் வந்து விட்டாலே சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பதுவழக்கமாகி விட்டது. அதிலும் சமீப காலமாக புறநகர்ப் பகுதிகளில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications