அரவாணிகளின் கூவாகம் திருவிழா தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

அரவாணிகளின் சித்திரை திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரவாணிகள் மத்தியில் மட்டுமே பிரசித்தி பெற்றிருந்த இந்தக் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இப்போதுமற்றவர்களையும் ஈர்த்து வருகிறது. அரவாணிகளைப் பார்க்கவும் அவர்களின் வழிபாட்டைப் பார்க்கவும்தமிழகம் முழுவதும் இருந்தும் இளைஞர்களும், பெரிசுகளும் திருவிழாக் காலங்களில் இங்கு குவிந்துவிடுகின்றனர்.

மேலும் அரவாணிகளில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால், இந்த விழாவைதமிழக நலத்துறையும் பல சமூக நல அமைப்புகளும் எய்ட்ஸ் மற்றும் முறைகேடான உடலுறவின்அபாயங்கள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பயன்படுத்தி வருகின்றன.

இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலேயே பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்களும் இந்தகூவாகம் திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்னமியன்று விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கானதிருவிழாவும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஏராளமான அரவாணிகள் கூத்தாண்டவர்கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கூத்தாண்டவரை திருமணம் செய்து, அவர் சார்பில் அரவாணிகள்தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி மே 7ம் தேதி நடக்கிறது. தாலி கட்டிக் கொண்ட பின்னர் தாலியை அறுத்து விட்டுஅரவாணிகள் கதறி அழுது கூத்தாண்டவரை வணங்கி வழிபடுவார்கள்.

விழாவையொட்டி லட்சக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்புஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இப் பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக அரவாணிகளும், உள்ளூர் மக்களும் புகார் கூறுகின்றனர்.

திருவிழாவையொட்டி அரவாணிகள் பங்கேற்கும் அழகிப் போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+