உழைப்பாளர்களின் பாதுகாவலன் அதிமுக: ஜெயலலிதா
தூத்துக்குடி:
உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாவலனாக அதிமுக விளங்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரனை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ளவீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் முதன்முதலில் சந்தித்த தேர்தல் களம் திருச்செந்தூர் இடைத் தேர்தல். 1983-ல் நடைபெற்ற அத் தேர்தலில்எனக்கு வெற்றி கிடைத்தது. இப்போதைய தேர்தலிலும் வெற்றிக்கனியை பரிசாகத் தருவீர்கள் என்பதில் எனக்குஐயம் இல்லை.
எத்தனை சூரர்கள் எதிர்த்து நின்ற போதிலும் அனைவரையும் முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த இடம்திருச்செந்தூர். எண்ணிக்கையில் சூரர்கள் எப்போதும் அதிகம் இருப்பார்கள் என்றாலும் இறுதி வெற்றிசத்தியத்துக்குத்தான். இதுதான் இந்த திருச்செந்தூர் மண் உணர்த்தும் செய்தி.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொழிலாளரைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில்நிறைவேற்றப்பட்டன. தொழிலாளரின் குழந்தைகள் தொழிலாளர்களாகவே இருந்து விடக்கூடாது என்பதற்காக,அவர்களுக்கென பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பப் பயிலகங்கள் ஆகியவற்றை அதிமுக அரசு அமைத்தது.
தொழிலாளர்களின் குடும்பங்களில் விளக்கேற்றும் இத்தகைய கல்விப் புரட்சியை திமுக அரசு செய்ததா?
உழைக்கும் மக்களின் அரசு அதிமுக அரசு. விவசாயிகள், பஞ்சாலைத் தொழிலாளர், நெசவாளர், மீனவர் மற்றும்இதர தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாவலனாக அதிமுக அரசு விளங்குகிறது என்று பேசினார்.












Click it and Unblock the Notifications