For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) இன்ஸ்பெக்டர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தொழில்துறை பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு பிரசாரம் செய்ய வந்தபோது விமான நிலையத்தின் 3வதுமாடியில் இந்தப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் (42) பாதுகாப்பு பணியில் இருந்தார். இவர்அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

வாஜ்பாய் டெல்லிக்குத் திரும்பி பின்னர் ஓம் பிரகாஷ் திடீரென 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்த போலீசார் போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் ஒருவரின் தற்கொலை முயற்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X