சோனியா பிரதமராக மக்கள் வாக்களிக்கவில்லை:பாஜக
டெல்லி:
சோனியா பிரதமராக மக்கள் வாக்களிக்கவில்லை என பாஜக கூறியுள்ளது.
ஆஜ் தக் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன்,
மக்கள் யாருக்கும் பெரும்பான்மை வழங்கவில்லை. தேர்தல் தீர்ப்பு சோனியா பிரதமராக வேண்டும்என்பதும் அல்ல. பிரச்சாரத்தின்போது சோனியாவின் பெயரை பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் முன்நிறுத்தவே இல்லை.
அப்படி முன் நிறுத்தி பிரச்சாரம் செய்திருந்தால், காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும்இந்த அரசு 5 ஆண்டுகாலம் நீடிக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அடிக்கடி தேர்தல்வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை ஜாதி அரசியல் நடத்திவருகின்றன. அந்த வேலையை பா.ஜ.க. செய்யாது. நாங்கள் ஜாதி அரசியல் நடத்தவே மாட்டோம்என்றார்.
சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற விவகாரம் இனி தினந்தோறும் கிளப்பப்படும் என பா.ஜ.கவின்இன்னொரு பொதுச் செயலாளரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications