தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்துவோம்- கருணாநிதி
டெல்லி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் திமுக சேர வேண்டும் என்றுஅக் கட்சியின் தலைவர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங்சுர்ஜித் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
கருணாநிதியை இன்று காலை சந்தித்த சுர்ஜித் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். சந்திப்புக்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜித்,
அமைச்சரவையில் திமுக சேர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கான சாத்தியங்கள் குறித்துவிவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததது. தமிழகத்தில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிமகத்தானதாகும்.
மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் பா.ஜ.கவைத் தோற்கடிப்பதில் நாங்கள் பங்குவகித்தோம். இப்போதைய நிலையில், அமைச்சரவையில் சேர்வதில்லை என்ற முடிவில் மறுபரிசீலனை இல்லைஎன்றார்.
இதன் பின்னர் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்தியில் அரசு அமைந்த பின்னர் தான்அமைச்சரவையில் பங்கேற்போமா இல்லையா என்று திமுக முடிவு செய்யும்.
சோனியா வெளிநாட்டவர் என்ற கோஷம் எல்லாம் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால்அவர் பிரதமராவதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் அதிமுகவும் பா.ஜ.கவும் இதைச்சொல்லித் தான் பிரச்சாரம் செய்தன. மக்களால் அக் கட்சிகள் நிராகரிக்கப்பட்டன.
மத்தியில் அமையும் அரசிடம் பொடாவை நீக்க வேண்டும், தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களைஅதிகரிக்க வேண்டும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும், காவிரி விஷயத்தில்நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications