கிடப்பில் போடப்பட்டது புதிய தலைமைச் செயலக திட்டம்
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்ததைதமிழக அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகம்மற்றும் சட்டசபை செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். இதற்காக முதலில்மகாபலிபுரம் செல்லும் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் இடம் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு கட்டுவதால்திட்ட மதிப்பு அதிகமாகும் என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அயோத்திகுப்பம் மீனவ குடியிருப்பு பகுதியைக் காலி செய்து அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட தமிழகஅரசு தீர்மானித்தது. இதற்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள ராணிமேரிக் கல்லூரியில் தலைமைச் செயலகம் கட்டுவது எனத்தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் கடற்கரையோரமாக ரூ.50 கோடிக்கு மேல் திட்ட மதிப்புடைய கட்டடங்களைக் கட்ட மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதடை விதித்தார்.
இதனால் ராணி மேரிக் கல்லூரியும் மீனவர் குப்பங்களும் தப்பின.
இந் நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதியதலைமைச் செயலகத்தைக் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தையும் அரசுதள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், பெரும் செலவில் ஒரு புதிய தலைமைச் செயலகம்கட்டுவதால் மக்களிடம் அதிருப்தி அதிகமாகும் என்பதாலேயே இத் திட்டத்தை இப்போதைக்குசெயல்படுத்துவதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், அண்மையில் ஜெயலலிதா அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளால் ஏற்படும் நிதி நெருக்கடியைச்சமாளிக்கவே இத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications