துணை சபாநாயகராகிறார் எல்.கணேசன்
சென்னை:
மதிமுக அவைத் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பியுமான எல்.கணேசன் மக்களவை துணை சபாநாயகராகநியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும்பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில் அமைச்சரவையிலும், ஆட்சியிலும் இடம்பெறாத ஒரே கட்சியாக மதிமுக மட்டுமே உள்ளது.இதனால் மதிமுகவுக்கும் ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கோரிக்கைவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வைகோ ஏற்றுக் கொள்வார் என்று மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி எல்.கணேசன் துணை சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சேர மாட்டோம்: வைகோ
இந் நிலையில் மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்ற முடிவில் மதிமுக உறுதியாக இருப்பதாக வைகோகூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வி.பி.சிங், ஹர்கிஷன் சுர்ஜித் ஆகியோர் என்னிடம் மத்தியஅமைச்சரவையில் சேருமாறு வலியுறுத்தினர்.
ஆனால், கட்சியின் பொதுக்குழுவில், அமைச்சரவையில் சேருவதில்லை என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதால், அமைச்சரவையில் சேர இயலாது என்று தெரிவித்தேன். அந்த முடிவில் எந்தமாற்றமும் இல்லை, மதிமுக அதில் உறுதியாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications