பாஸ்போர்ட் கிடைக்கவில்லை: மீண்டும் நீதி-மன்-றத்தை அணுகுகிறார் வைகோ
சென்னை:
பாஸ்போர்ட் அதிகாரிகள் தனது விசாவை திரும்பித் தருமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மதி-முக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
எம்.பி. என்ற -முறையில் வைகோவுக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தது. இந்த பாஸ்போர்ட், 13வதுமக்களவை கலைக்கப்பட்ட -நாளன்று காலாவதியாகி விட்டது.
இந் -நிலையில் 11 மாதமாகும் தனது பேத்தியை, மகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமெ-ரிக்கா செல்ல நீதிமன்றம்அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்காக புதிய பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அதிகா-ரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோ-ரி வைகோ மனு செய்தார்.
இந்த மனுவை விசா-ரித்த உயர்நீதிமன்றம் கடந்த மே 18ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில்,பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் வசம் உள்ள காலாவதியாகி விட்ட சிறப்பு பாஸ்போர்ட்டை வைகோவிடம்ஒப்படைக்க வேண்டும்.
வைகோ அந்த பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பாஸ்போர்ட் அதிகாரிகள்வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட் வழங்கி, அதை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட் அதிகா-ரிகள் வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட்டை வி-நியோகித்து அதைபூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந் -நிலையில் ஏற்கனவே காலாவதியாகி விட்ட சிறப்ப பாஸ்போர்ட்டின்-மூலம் 2009ம் ஆண்டு வரைக்கும் விசா பெற்றிருந்தார் வைகோ. அந்த விசா தற்போது பாஸ்போர்ட்அதிகா-ரிகளிடம் உள்ளது.
எனவே, அந்த விசாவை தன்னிடம் வழங்குமாறு கோ-ரியும், புதிய பாஸ்போர்ட்டை தன்னிடம் பூந்தமல்லிநீதிமன்றம் ஒப்படைக்கக் கோ-ரியும் புதிதாக ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வைகோ.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 1ம் தேதி நீதிபதிகள் மிஸ்ரா, குலசேகரன் ஆகியோர் -முன்பு விசாரணைக்குவரும் எனத் தெ-ரிகிறது.