இருப்பது ஒரு சீட், அதுக்கும் அடிதடி; இது காங். ஸ்டைல்!
சென்னை:
ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதில் 4 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். மீதம்உள்ள 2 இடங்களில் ஒரு சீட் பாமகவுக்கு ஒதுக்கப்படும். இன்னொரு சீட்டில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
காங்கிரஸூக்கான சீட்டைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலில் சீட் கிடைக்காத பலரும்இப்போது மாநிலங்களவ சீட்டைப் பெற முட்டி மோதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், திண்டிவனம் ராமமூர்த்தி,வசந்தகுமார் உள்ளிட்டோர் இதில் முக்கியமான போட்டியாளர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவரின் ஆதரவைப் பெற்று அவர்கள் மூலம் சீட்டைப்பெற முயலுகின்றனர். ஒரேஒரு சீட்டுக்கு இத்தனை பேர் போட்டியா என்று காங்கிரஸ் மேலிடம் பயந்து போயுள்ளது.
இத்தனை பேர் முட்டி மோதினாலும் கூட, ஜெயந்தி நடராஜனுக்கே சீட் கிடைக்கும் என்று தெரிகிறது. அவரதுஅனுபவம், சோனியா காந்தியிடம் அவருக்குள்ள செல்வாக்கு, ஜி.கே.வாசனின் ஆதரவு ஆகியவை அவருக்குதச்சாதகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications