ஜெயலலிதா பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
அதிமுக அரசை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணித்த நிலையில், அவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது. எனவே அவர் பதவி விலக வேண்டும்.
அதே நேரத்தில் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க மாட்டேன்.
தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா முன்னர் தான் அறிவித்த பல உத்தரவுகளைத் திரும்ப பெற்றுள்ளார். இதன் மூலம் அவையெல்லாம் மக்களுக்கு எதிரானவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு இடைத் தேர்தல் கொண்டு வர முயல்கிறாரா என்ற அச்சத்தை இவரது ரத்து நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்துகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications