தாராபுரம்: தீயில் கருகி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலிதாராபுரம்:ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே தீயில் கருகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.தாராபுரம் அருகே உள்ளது வெருவேடம்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். பால் வியாபாரி ஆவார். இன்று காலை பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார் ஈஸ்வரன்.மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் ஊற்றுவதற்காக டேங்கைத் திறந்து ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி பெட்ரோல் நிரம்பி விட்டதா என்று தீக்குச்சி பொருத்தி பார்த்துள்ளார். அப்போது திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.வண்டியில் பிடித்த தீ குடிசையில் பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வீட்டில் துங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வர ஈஸ்வரன் தம்பதியினர் முயன்றனர். ஆனால் உள்ளே சிக்கி கருகினர்.சிறிது நேரத்திலேயே 4 பேரும் உயிருடன் கருகி இறந்தனர். வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளும் இந்த தீவிபத்தில் கருகின.
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே தீயில் கருகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
தாராபுரம் அருகே உள்ளது வெருவேடம்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். பால் வியாபாரி ஆவார். இன்று காலை பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார் ஈஸ்வரன்.
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் ஊற்றுவதற்காக டேங்கைத் திறந்து ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி பெட்ரோல் நிரம்பி விட்டதா என்று தீக்குச்சி பொருத்தி பார்த்துள்ளார். அப்போது திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.
வண்டியில் பிடித்த தீ குடிசையில் பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வீட்டில் துங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வர ஈஸ்வரன் தம்பதியினர் முயன்றனர். ஆனால் உள்ளே சிக்கி கருகினர்.
சிறிது நேரத்திலேயே 4 பேரும் உயிருடன் கருகி இறந்தனர். வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளும் இந்த தீவிபத்தில் கருகின.












Click it and Unblock the Notifications