திண்டிவனம் அருகே இரு லாரிகள் மோதல்: 12 பேர் பலி-78 பேர் காயம்திண்டிவனம்:திண்டிவனம் அருகே நேற்றிரவு நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது இன்னொரு டிப்பர் லாரி மோதியதில் 5 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். 78 பேர் படுகாயமடைந்தனர்.திண்டிவனம் அருகே உள்ள உப்புவேலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சுமார் 90 பேர் தனியார் பேருந்தில் வேலூர் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அங்கிருந்த ஏரியில் பாய்ந்து கவிழ்ந்தது.இதில் 90 பேரும் காயமடைந்தனர். இவர்களை பெருமாக்கல் கிராம மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு, அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரியில் ஏற்றி விட்டனர்.அந்த டிப்பர் லாரி மானூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த இன்னொரு டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் டயர்களில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.படுகாயமடைந்த 80 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 12 பேர் ஒரே விபத்தில் இறந்ததால், திண்டிவனம் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே நேற்றிரவு நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது இன்னொரு டிப்பர் லாரி மோதியதில் 5 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். 78 பேர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள உப்புவேலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சுமார் 90 பேர் தனியார் பேருந்தில் வேலூர் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அங்கிருந்த ஏரியில் பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் 90 பேரும் காயமடைந்தனர். இவர்களை பெருமாக்கல் கிராம மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு, அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரியில் ஏற்றி விட்டனர்.

அந்த டிப்பர் லாரி மானூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த இன்னொரு டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் டயர்களில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

படுகாயமடைந்த 80 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.

இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 12 பேர் ஒரே விபத்தில் இறந்ததால், திண்டிவனம் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+