தமிழக ரத்த வங்கிகளை கம்ப்யூட்டர் மூலம் இணைத்து நெட்வோர்க் உருவாக்க திட்டம்சென்னை:தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகளை கம்யூட்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து நெட்வொர்க்கை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருப்பவரும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற முடியும்.இந்த முயற்சியை தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.இதன் முதல்கட்டமாக சென்னை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ரத்த வங்கிகள் ஆகியவை கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் கொண்டு வரப்படவுள்ளன.எந்த வங்கியில் எந்த வகை ரத்தம் இருப்பு உள்ளது, எந்த வகை ரத்தம் உடனடியாகத் தேவைப்படுகிறது, ரத்தம் தந்தவர் யார், அந்த குரூப், ரத்தம் தர தயாராக உள்ளவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.இதனால் வேண்டிய குரூப் ரத்தத்தைப் பெற கொடையாளியை உடனடியாக தொடர்பு கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.இந்த நெட்வோர்க் மூலமாக சில ரத்த வங்கிகளில் அளவுக்கதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டு, அது வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.இந்த நெட்வோர்க்கின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளும் படிப்படியாக ஒன்றிணைக்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகளை கம்யூட்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து நெட்வொர்க்கை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருப்பவரும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற முடியும்.

இந்த முயற்சியை தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.

இதன் முதல்கட்டமாக சென்னை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ரத்த வங்கிகள் ஆகியவை கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் கொண்டு வரப்படவுள்ளன.

எந்த வங்கியில் எந்த வகை ரத்தம் இருப்பு உள்ளது, எந்த வகை ரத்தம் உடனடியாகத் தேவைப்படுகிறது, ரத்தம் தந்தவர் யார், அந்த குரூப், ரத்தம் தர தயாராக உள்ளவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.

இதனால் வேண்டிய குரூப் ரத்தத்தைப் பெற கொடையாளியை உடனடியாக தொடர்பு கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இந்த நெட்வோர்க் மூலமாக சில ரத்த வங்கிகளில் அளவுக்கதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டு, அது வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

இந்த நெட்வோர்க்கின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளும் படிப்படியாக ஒன்றிணைக்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+