காவிரி பாதயாத்திரை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

பூம்புகார்:

காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் பச்சை மனிதன் திரைப்படக் குழுவினர் சுமார் 100 பேர் பூம்புகாரிலிருந்து, மேட்டூர் அணைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

பச்சை மனிதன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. காவிரி நீர்ப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படக் குழுவினர் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டுளளனர்.

இந்தக் படக் குழுவைச் சேர்ந்த சுமார் 100 பேர் காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரிலிருந்து தங்களது பாதயாத்திரையைத் தொடங்கினார். சுமார் 300 கிலோமீட்டர் தொலைவு நடந்து மேட்டூர் அணையில் தங்களது பாதயாத்திரையை முடிக்கின்றனர்.

பாதயாத்திரையில் பங்கேற்பவர்கள் வெள்ளை வேட்டி, பச்சை சட்டையுடன் நடந்து செல்கிறார்கள். இந்த பாதயாத்திரையில் நடிகர் நாசர், இயக்குனர்கள் சேரன், லிங்குசாமி, எம்.எஸ். உதயமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+