நீதிபதி மீதான தாக்குதல் வழக்கு: ஜி.கே.மணிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
சென்னை:
சென்னை செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகி மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 42 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் செங்கல்வராயன் அறக்கட்டளை உள்ளது. வன்னிய சமூகத்திற்குச் சொந்தமானது இது. இதை நிர்வகிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணி என்பவரது தலைமையில் புதிய நிர்வாகக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.
இதன்படி நிர்வாகப் பொறுப்பை ஏற்க நீதிபதி தங்கமணி வந்தபோது அவரை பாமகவினர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றனர், அங்கு பெரும் ரகளையும் ஏற்பட்டது.
இதையடுத்து பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 42 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது. இதற்காக ஜி.கே.மணி, காடுவெட்டி குரு ஆகியோர் உள்ளிட்ட 42 பேரும் எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications