அமெரிக்காவிலிருந்து வருவதில் தாமதம்: வைகோ கோரிக்கை ஏற்பு
சென்னை:
அமெரிக்காவில் இருந்து இம்மாதம் 20ம் தேதிக்குப் பதிலாக 22ம் தேதி சென்னை திரும்ப அனுமதிக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
பொடா சட்டத்தில் கைதாகி இப்போது ஜாமீனில் இருக்கும் வைகோ நீதிமன்ற அனுமியுடன் சிகாக்கோ சென்றார்.
சிகாக்கோவில் இருந்து சென்னை திரும்ப 20ம் தேதிக்கு முன் விமான டிக்கெட் கிடைக்காததால், இரண்டு நாள் தாமதமாக வருவேன் என்று உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்த தனது புதிய மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகர், நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வைகோவின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது.
ஜூன் 20ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் வைகோ சென்னை கிளம்புகிறார். 22ம் தேதி மும்பை வந்திறங்கி அங்கிருந்து அன்றே அவர் சென்னை வருவார் என நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
தனது 11 மாத பேத்தியை மகளிடம் விட்டுவிட்டு வருவதற்காக தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றார் வைகோ.












Click it and Unblock the Notifications