28ல் ஜெ. டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 28ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்.
உள்ளாட்சி நிர்வாகம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடான ஆலோசனை மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 28, 29ம் தேதிகளில் நடக்கும் இம் மாநாட்டில் ஜெயலலிதாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.
அப்போது பிரதமரை ஜெயலலிதா தனியே சந்தித்தும் பேச்சு நடத்தவுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு மற்றும் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து மன்மோகன் சிங்கிடம் அவர் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது.
மன்மோகன் பிரதமரான பின் அவரை ஜெயலலிதா சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications