தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள்
டெல்லி:
மதுரை-டெல்லி, சென்னை-ஹூப்ளி, சென்னை- கும்பகோணம், சென்னை- தென்காசி,சென்னை-நாகர்கோவில் இடையே புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்ட்ரல்-தாம்பரம், மதுரை-மானாமதுரை-ராமநாதபுரம், திருச்சி-காரைக்குடி-மானாமதுரை இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் மாற்றப்பட்டு, அகல ரயில் பாதைஅமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 32 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 ரயில்கள்தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2004-05ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்றுநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் விவரம்:
மதுரையில் இருந்து டெல்லிக்கு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் என்ற புதிய நேரடி ரயில்இயக்கப்படவுள்ளது.
சென்னையிலிருந்து 4 ரயில்கள்:
அதே போல சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு புதியஎக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
எழும்பூரில் இருந்து கும்பகோணத்துக்கு தஞ்சாவூர் வழியார் புதிதாக எக்ஸ்பிரஸ் ரயில்இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு புதிய ரயில் விடப்படவுள்ளது.
அதே போல சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது.
ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை:
சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வுப் பணிகள்தொடங்கப்படும்.
சேலம்-பெங்களூர் இரு வழிப் பாதை:
அதே போல சேலம்-பெங்களூர் இடையிலான ஒரு வழிப் பாதையை இரு வழி அகல ரயில்பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணிகள் இந்த ஆண்டுதொடங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications