கொழும்பு தாக்குதல்: புலிகள் மீது அமெரிக்கா புகார்
கொழும்பு:
கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனஅமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே இந்த குண்டு வெடிப்பு நடந்த 4 போலீசார்இறந்தனர். இந் நிலையில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காவிட்டாலும், இது புலிகளின்கைவரிசையாகவே தோன்றுகிறது. அதற்கான அடையாளங்களைக் காண முடிகிறது. இந்தத்தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறையை புலிகள் உடனே கைவிட வேண்டும். புலிகளிடம் இதை அமெரிக்கா தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. அமைதி ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளபடி அரசியல் கொலைகள் உள்ளிட்டஅனைத்து வன்முறைகளையும் புலிகள் நிறுத்த வேண்டும்.
மேலும் கிழக்கு இலங்கையில் நடந்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைஅரசும் விடுதலைப் புலிகளும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என புலிகள் கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதை கருணா தலைமையிலான கும்பல் தான் நடத்தியிருக்க வேணடும் என்றும்அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல புலிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர்என இலங்கை அரசு கூறுகிறது.
இந் நிலையில் மனித வெடிகுண்டாக வந்த பெண்ணுடன் வந்த இன்னொரு 29 வயது பெண்ணைஇலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, கிழக்கு இலங்கையில் தங்கள் மீது ராணுவத்தின் உதவியுடன் கருணா தரப்பினர்தாக்குதல் நடத்தி வருவதாக புலிகள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாகவே கொழும்பில் புலிகள்தாக்குதல் நடத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் நேற்று மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் திரிந்த கருணா ஆதரவாளர்கள் இருவரைபுலிகள் நேற்று சுட்டுக் கொன்றனர்.
மேலும் கருணாவின் கும்பலைச் சேர்ந்த 14 பேருக்கு அடைக்கலம் கொடுத்த புத்தத் துறவி மீதுநேற்று கிரனைட் குண்டுத் தாக்குதல் நடந்தது. புத்த வழிபாட்டு மையத்துக்குள் நடந்த இத்தாக்குதலில் அந்தத் துறவி உள்பட பலர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications