சிவகாசி அச்சக அதிபர் கைது
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய சிவகாசியைச் சேர்ந்த அச்சக அதிபர் மெகபூப் ஜான் என்பவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது சிபிஐ அதிகாகள் அதிரடி நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று திடீரென்று சிவகாசிக்கு வந்து அங்கு அச்சகம் நடத்திவரும் மெகபூப் ஜான் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இவர் போலி முத்திரைத் தாள் மோசடியின் முக்கிய புள்ளியான தெல்கியின் தமிழகக் கூட்டாளி நிஜாமுதீனின்நெருங்கிய நண்பராவார். அவருக்காக சிவகாசியில் உள்ள தனது உசேன் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் போலிமுத்திரைத் தாள்களை அச்சடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு விட்டதால் தனது அச்சகத்தை மூடி விட்டு இரும்புக் கடையைஆரம்பித்தார் மெகபூப் ஜான்.
இப்போது கர்நாடக போலீஸ் பிடியில் இருக்கும் நிஜாமுதீனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,கர்நாடக காவல்துறையினர் நேற்று சிவகாசிக்கு வந்து மெகபூப் ஜானைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications