இந்துக்களை நான் அவமதிக்கவில்லை: டி.ஆர்.பாலு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்துக்களை அவமரியாதை செய்யும் வகையில் நான் கிறிஸ்தவ கூட்டத்தில் பேசவில்லை என்று மத்தியதரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

சென்னையில் கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய பிராத்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டடி.ஆர்.பாலு, தான் இந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று கூறியதாக பரபரப்பு செய்திகள்வெளியாகின.

பாலுவின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாவிட்டால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.

இந் நிலையில் இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், நான் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவன், மதச்சார்பற்ற ஒருகட்சியைச் சேர்ந்தவன். நான் ஏன் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டும்? இந்துக்களை நான் இழிவுபடுத்திப்பேசினேன் என்றால் தென் சென்னை தொகுதி மக்களால் நான் எப்படி 4 முறை எம்.பியாக தேர்வுசெய்யப்பட்டிருப்பேன்?

தினகரன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் இந்துக்களை இழிவுபடுத்திப் பேசவில்லை. மாறாக, நான் சார்ந்தபிற்பட்ட சமுதாயம், உயர் ஜாதிக்காரர்களால் எந்த அளவுக்கு நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்கிப்பேசினேன். ஒரே மதத்தில் ஜாதி என்ற பெயரில் எத்தனை பாகுபாடுகள் நிலவுகின்றன என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன் என்றார் பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+