சென்னை கூரை பள்ளியில் பெரும் தீ
சென்னை:
கும்பகோணம் கோரத்தின் சுவடே இன்னும் மறையாத நிலையில் அதே போன்றதொரு மிகப் பெரிய தீவிபத்துசென்னை அருகே நடந்துள்ளது. இருப்பினும் பள்ளி விடுமுறையாக இருந்ததால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்தது போன்ற தீவிபத்து செங்குன்றம், மொண்டியம்மன் நகர் பகுதியில்உள்ள சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியிலும் நடந்துள்ளது.
இந்தப் பள்ளியில் நேற்று காலை மாணவர்கள் அனைவரும் குழுமி, கும்பகோணத்தில் இறந்த மாணவர்களுக்குநினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
இந் நிலையில் பிற்பகல் 3 மணியளவில் பள்ளியின் மாடிப் பகுதியில் உள்ள கூரையில் தீப்பிடித்துக் கொண்டது.இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் குரல் எழுப்பியவாறு தீயை அணைக்க விரைந்தனர்.
அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்தும் கூரை முழுவதும் எரிந்துவிட்டது. வகுப்பறையில் இருந்த நாற்காலிகளும் எரிந்து விட்டன.
நல்ல வேளையாக விடுமுறையாக இருந்ததால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இங்குள்ள வகுப்புகளில்45 மாணவர்கள் வரை படித்து வந்தனர் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications