Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரைகளை அகற்ற உதவும் லாட்டரி வியாபாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்பகோணம் பள்ளி தீவிபத்தைத் தொடர்ந்து தமிழக கூரைகளில் இயங்கி வரும் பள்ளிகளில் கூரைகளுக்குப்பதில் கான்க்ரீட் கட்டடம் கட்டித் தர ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்க லாட்டரி விற்பனையாளர்கள்முன்வந்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய லாட்டரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சார்பு நிறுவனங்களின் தலைவர்உஸ்மான் பயஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கும்பகோணம் தீவிபத்தில் இறந்த பள்ளி மாணவர்களுக்கு எங்களது சங்க செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல்தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிக் கூரைகளை அகற்றி நிரந்தரக் கட்டடம் கட்டித் தர முடிவு செய்துள்ளோம்.இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள சங்க உறுப்பினர்களிடம் ரூ. 25 லட்சம் நிதி திரட்டித் தரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள ஐந்து அரசுப் பள்ளிகளில் கூரைகளை அகற்றி விட்டு நிரந்தரக் கட்டடம் கட்டித்தர முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் லாட்டரித் தொழிலுக்கு முதல்வர் மீண்டும் அனுமதி அளித்தால், இந்தப் பணிக்காக ரூ. 100 கோடிவரை திரட்டித் தரவும் உறுதி கூறுகிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+