ஆசிரியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி: அரசு முடிவு
சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, தீவிபத்தின்போது தீயை அணைப்பது, நிலைமையை சமாளிப்பதுபோன்றவை குறித்து 15 நாள் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தின்போது மாணவர்களை தவிக்க விட்டு விட்டு பள்ளி ஆசிரியர்கள்தப்பியோடிய செய்தி தமிழகம் முழுவதையும் கலங்கடித்துள்ளது. ஆசிரியர்களை நம்பி எப்படி நமதுபிள்ளைகளை அனுப்புவது என்ற அச்சம் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.
இந் நிலையில் பள்ளிகளில் தீவிபத்து ஏற்பட்டால் அதை சமாளிப்பது எப்படி, குழந்தைகளை பத்திரமாக மீட்பதுஎப்படி, தீயை அணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ளஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் இந்த பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் இந்த பயிற்சி 15நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தீயணைப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications